ADDED : மார் 11, 2025 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே வள்ளிமாடன் வலசையில் உள்ள பூரண புஷ்கலா, இலங்குமணி அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. காலை 9:35 மணிக்கு கோயில் கோபுர விமான கலசத்தில் குருக்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
மூலவர்கள் பூரண புஷ்கலா, இலங்குமணி அய்யனார், மாடசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.