sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாம்பன் புதிய பாலத்தில் 60 கி.மீ., வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்

/

பாம்பன் புதிய பாலத்தில் 60 கி.மீ., வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்

பாம்பன் புதிய பாலத்தில் 60 கி.மீ., வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்

பாம்பன் புதிய பாலத்தில் 60 கி.மீ., வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்


UPDATED : ஆக 22, 2024 04:21 AM

ADDED : ஆக 22, 2024 02:10 AM

Google News

UPDATED : ஆக 22, 2024 04:21 AM ADDED : ஆக 22, 2024 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பாம்பன் கடலில், 550 கோடி ரூபாயில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி முடிந்து, பாலம் நடுவில் துாக்கு பாலம் பொருத்தப்பட்டது.

இதில், துாக்கு பாலத்தில் அதிர்வு ஏற்படுகிறதா என்பதையும், அதன் திறன் குறித்து பரிசோதிக்கவும் நேற்று பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.

நேற்று காலை, 10 முதல் 60 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. சென்னை ஐ.ஐ.டி., பொறியாளர்கள் குழு, துாக்கு பாலத்தின் தண்டவாளத்தில் 'சென்சார்' கருவிகள் பொருத்தி, அளவீடு கருவி வாயிலாக அதிர்வு ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்தனர்.

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாகவும், இதன் ஆய்வறிக்கை ரயில்வே அமைச்சகத்துக்கு அனுப்பப்படும் என, ஐ.ஐ.டி., குழுவினர் தெரிவித்தனர்.

பாம்பன் புதிய பாலத்தில் கருங்கற்கள் நிரப்பிய சரக்கு ரயிலுடன் மொத்தம் 1,160 டன் எடையில் சோதனை ஓட்டம் நடந்தது.

இனிவரும் நாளில் பயணியர் ரயில் பெட்டியுடன் சோதனை ஓட்டமும், துாக்கு பாலத்தை திறந்து மூடும் சோதனையும் நடக்கும் என, ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us