sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கைதி உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் மீதான வழக்கு ஜூன் 26க்கு தள்ளிவைப்பு

/

கைதி உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் மீதான வழக்கு ஜூன் 26க்கு தள்ளிவைப்பு

கைதி உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் மீதான வழக்கு ஜூன் 26க்கு தள்ளிவைப்பு

கைதி உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் மீதான வழக்கு ஜூன் 26க்கு தள்ளிவைப்பு


ADDED : ஜூன் 11, 2024 08:29 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 08:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:-ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி போலீஸ் ஸ்டேஷனில் கைதி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சாட்சிகள் விசாரணைக்கு பிறகு வழக்கை ஜூன் 24க்கு தள்ளி வைத்து நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார்.

மதுரையை சேர்ந்த ராமானுஜன் மகன் வெங்கடேசன் 26. திருட்டு வழக்கு தொடர்பாக 2012- அக்.,2-ல் பரமக்குடி எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டவர் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதில் அவர் இறந்ததாக உறவினர் புகார் தெரிவித்தனர். எஸ்.ஐ., முனியசாமி உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஓய்வு பெற்ற முனியசாமி ஜாமினில் வந்த பின்பு உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார்.

ஏட்டு பரமக்குடி ஞானசேகரன், மஞ்சூர் கிருஷ்ணவேல், ஆப்பநாடு கோதண்டம் ஆகியோர் மீது வழக்கு நடந்தது. சி.பி.சி.ஐ.டி போலீசார் ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2 ல் அறிக்கை தாக்கல் செய்தனர். அங்கிருந்து வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி குமரகுரு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

கோதண்டம், ஞானசேகரன் ஆஜராகினர். கிருஷ்ணவேல் ஆஜராகவில்லை. மனுதாரர் உள்ளிட்ட நான்கு சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. விசாரணையை ஜூன் 24க்கு தள்ளி வைத்து நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us