ADDED : ஆக 08, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பாண்டுகுடி கோனேரியேந்தல் கிராமத்தில் மகாலிங்கம் மூர்த்தி கோவில் திருவிழா, ஜூலை 30ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மதியம் 3:00 மணிக்கு மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடந்தது. 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
விளையாட்டை வேடிக்கை பார்த்த, ஆதியூரை சேர்ந்த விவசாயி பாக்கியம், 55, வயிற்றில் காளை குத்தியதில் குடல் சரிந்து அதே இடத்தில் பலியானார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர். பாக்கியத்திற்கு மனைவி, மகள், ஒரு மகன் உள்ளனர்.