sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிய ரோடு

/

மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிய ரோடு

மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிய ரோடு

மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிய ரோடு


ADDED : மே 24, 2024 02:09 AM

Google News

ADDED : மே 24, 2024 02:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் கொன்னையடி விநாயகர் தெருவில் மழைநீர் செல்ல வழியில்லாமல் தெருவில் தேங்கி ரோடு சேறும் சகதியுமாக மாறியதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

பேரூராட்சி 1வது வார்டு கொன்னையடி விநாயகர் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் ரோட்டோரங்களில் ஆங்காங்கே குளம்போல் தேங்கியுள்ளது.

மழை பெய்தால் தண்ணீர் செல்ல வழியின்றி வீடுகளுக்கு முன்பு தெருக்களில் குளம்போல் தேங்கி நிற்கிறது. கடந்த பருவமழை காலத்தில் தேங்கிய மழைநீரை மோட்டார் வைத்து வெளியேற்றினர்.

பின் ரோட்டில் கிராவல் மண் கொட்டி சமன் செய்தனர். தற்போது பெய்த மழைக்கு மழைநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. ரோடும் சேறும் சகதியுமாக மாறி இருப்பதால் இவ்வழியே நடப்பதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர்.

எனவே கொன்னையடி விநாயகர் தெருவில் புதிய ரோடு அமைக்கவும், மழைநீர், கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us