/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் நிதியுதவி
/
பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் நிதியுதவி
ADDED : ஏப் 23, 2024 11:14 PM

கமுதி, - கமுதி அருகே அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பள்ளியின் வளர்ச்சிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினர்.
அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் 1996 முதல் 2002ம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
தாளாளர் அஷ்ரப் ஜூனைத் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் உசேன் முன்னிலை வகித்தார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் 180 பேர் சுவடுகள் என்ற வாட்ஸ்-ஆப் குழு உருவாக்கி பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர்.
இதையடுத்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது பள்ளியின் கழிப்பறை பராமரிப்பு உட்பட வளர்ச்சி நிதிக்காக ரூ.5 லட்சம் நிதியை பள்ளி நிர்வாக குழுவினரிடம் வழங்கினர்.
முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தி ஆசிரியர்களுக்கு மரியாதை செய்தனர்.
ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் பாலகுரு, கார்த்திக் உட்பட பலர் செய்தனர்.

