/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் வாலிபர் கொலை; விசாரிக்க 3 தனிப்படை அமைப்பு ; விசாரணை வளையத்தில் ஒரே குடும்பத்தினர்
/
பரமக்குடியில் வாலிபர் கொலை; விசாரிக்க 3 தனிப்படை அமைப்பு ; விசாரணை வளையத்தில் ஒரே குடும்பத்தினர்
பரமக்குடியில் வாலிபர் கொலை; விசாரிக்க 3 தனிப்படை அமைப்பு ; விசாரணை வளையத்தில் ஒரே குடும்பத்தினர்
பரமக்குடியில் வாலிபர் கொலை; விசாரிக்க 3 தனிப்படை அமைப்பு ; விசாரணை வளையத்தில் ஒரே குடும்பத்தினர்
ADDED : மார் 07, 2025 08:47 AM

பரமக்குடி : பரமக்குடியில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய், மகன், மகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி அருகே முதுகுளத்துார் விக்கிரபாண்டிபுரம் வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரகுமார் 35. இவர் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு பரமக்குடி தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்ற போது 3 பேர் கொண்ட கூலிப்படையினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
நேற்று காலை பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ரோடு மறியல் செய்தனர். பின்னர் டி.எஸ்.பி., சபரிநாதன் பேச்சுவார்த்தை நடத்திய பின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் உத்திரகுமார் உறவினர் பாலமுருகன் 27, பரமக்குடி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதில் பகைவென்றி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமியுடன் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்விரோதம் இருந்தது.
அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள் லேகாஸ்ரீ, மகன் விஷ்ணுபிரதான் துாண்டுதலின் பேரில் அடையாளம் தெரியாத 3 பேர் பைக்கில் வந்து உத்திரகுமாரை வாளால் வெட்டி கொலை செய்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.
பழனிச்சாமி ஓராண்டிற்கு முன்பு சென்னையில் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டது உட்பட, கொலை செய்யப்பட்ட உத்திரகுமார் மீது இரண்டு கொலை வழக்குகள், ஆள் கடத்தல் என ஆறு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதன்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை விசாரிப்பதுடன், மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருவதாக டவுன் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தெரிவித்தார்.