sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி அருகே பிடாரிசேரி கிராமத்தில் தீராத தாகம்

/

பரமக்குடி அருகே பிடாரிசேரி கிராமத்தில் தீராத தாகம்

பரமக்குடி அருகே பிடாரிசேரி கிராமத்தில் தீராத தாகம்

பரமக்குடி அருகே பிடாரிசேரி கிராமத்தில் தீராத தாகம்


ADDED : ஜூன் 06, 2024 05:18 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : -ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பரமக்குடி அருகே பிடாரிசேரி கிராமத்தில் தண்ணீர் பிரச்னை தீராத நிலையில் மக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடைகோடியில் பரமக்குடி ஒன்றியம் பிடாரிசேரி கிராமம் உள்ளது. தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் இங்கிருந்து ஆரம்பமாகிறது. இக்கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

600 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் வேட்பாளர்கள் இக்கிராமத்திற்கு செல்லத் தவறுவதில்லை.

அப்போதெல்லாம் அடிப்படை பிரச்சனையான குடிநீருக்கு உடனடி தீர்வு காணப்படும் என வாய்ஜாலம் காட்டியதுதான் மிச்சம். தற்போதும் தெருக்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்ட சூழலில் காட்சி பொருளாகவே உள்ளது.

பிடாரிசேரி பஸ் ஸ்டாப் அருகில் உள்ள குடிநீர் குழாய்களில் மாதத்தில் சில நாட்கள் மட்டுமே தண்ணீர் வருகிறது.

அப்போது தள்ளு வண்டிகளில் குடத்தை நிரப்பிய படி பெண்கள் குடிநீருக்காக வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை தொடர்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மூன்றுக்கும் மேற்பட்ட குடிநீர் வாகனங்கள் கிராமத்திற்கு வந்து செல்கின்றன. இதில் குடம் ரூ.10க்கு தண்ணீர் தேவைக்கு வாங்குகின்றனர்.

புழக்கத்திற்கு அங்குள்ள ஊருணியை மட்டுமே நம்பி இருக்கும் நிலை இருப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். ஆகவே மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பிடாரிசேரி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us