/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலோரத்தில் குப்பை அகற்ற வலியுறுத்தல்
/
கடலோரத்தில் குப்பை அகற்ற வலியுறுத்தல்
ADDED : பிப் 24, 2025 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: கிழக்கு கடற்கரை சாலை, உப்பூர் அருகே மோர்ப்பண்ணை மீனவர்கிராமம் அமைந்துள்ளது. இங்கு குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் குப்பையை கடற்கரை ஓரத்தில் கொட்டுகின்றனர். கடற்கரை ஓரத்தில் கொட்டப்பட்டு வரும் குப்பை அகற்றப்படாததால் காற்றில் அடித்துச் செல்லப்படும் குப்பை பரவி கடற்கரை முழுவதும் அசுத்தமானது.
சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.