sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருவாடானை திருத்தேர்வளை வழித்தடம் வழியாக மீண்டும் பஸ் இயக்க வலியுறுத்தல்

/

திருவாடானை திருத்தேர்வளை வழித்தடம் வழியாக மீண்டும் பஸ் இயக்க வலியுறுத்தல்

திருவாடானை திருத்தேர்வளை வழித்தடம் வழியாக மீண்டும் பஸ் இயக்க வலியுறுத்தல்

திருவாடானை திருத்தேர்வளை வழித்தடம் வழியாக மீண்டும் பஸ் இயக்க வலியுறுத்தல்


ADDED : மார் 14, 2025 07:04 AM

Google News

ADDED : மார் 14, 2025 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: திருவாடானையில் இருந்து திருத்தேர்வளை வழியாக இயக்கப்பட்ட

டவுன் பஸ் சில மாதங்களாக மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுவதால் அப்பகுதியில் உள்ள கிராமத்தினர் பாதிப்படைந்துள்ளனர்.

திருவாடானையில் இருந்து திருத்தேர்வளை, மேலக்கோட்டை ஆதிதிராவிடர் காலனி, கப்பகுடி வழியாக ஆனந்துாருக்கு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வழித்தடத்தில் தாழ்வாக உள்ள மரக்கிளைகளால் பஸ் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறி கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக திருவாடானையில் இருந்து மாற்று வழித்தடத்தில் ஆனந்துாருக்கு பஸ் இயக்கப்படுகிறது.

இதனால் திருத்தேர்வளை, மேலக்கோட்டை, ஆதிதிராவிடர் காலனி உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமத்தினர் பாதிப்படைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வழித்தடத்தில் உள்ள மரக்கிளைகளை அகற்றி மீண்டும் திருத்தேர்வளை, கப்பகுடி வழித்தடத்தில் பாஸ் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

--






      Dinamalar
      Follow us