/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓராண்டாகியும் வார்டு தேர்தல் நடக்கவில்லை
/
ஓராண்டாகியும் வார்டு தேர்தல் நடக்கவில்லை
ADDED : மே 09, 2024 05:07 AM
தொண்டி: தொண்டி பேரூராட்சி 5வது வார்டு கவுன்சிலர் இறந்து ஓராண்டாகியும் இடைதேர்தல் நடக்கவில்லை.
2021ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தொண்டி பேரூராட்சி ஐந்தாவது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கபட்டவர் தொண்டீஸ்வரன். இவர் கடந்த ஆண்டு மே மாதம் இறந்தார்.
அந்த வார்டுக்கான இடைதேர்தலை இன்னமும் அறிவிக்கவில்லை. இந்த வார்டுக்கான தேர்தல் எப்போது நடக்கும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இது குறித்து அதே வார்டை சேர்ந்த மாலிக் கூறியதாவது: மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் பதவி விலகினால் அல்லது இறந்தால் இடைத்தேர்தல் ஆறு மாதத்திற்குள் நடத்த வேண்டும்.
ஆனால் தொண்டி பேரூராட்சி ஐந்தாவது வார்டு கவுன்சிலர் பணியிடம் ஓராண்டாக காலியாக உள்ளது.
பொதுமக்களின் தேவைகளை அறிந்து பேரூராட்சியில் வலியுறுத்தி அடிப்படை வசதிகளை செய்வது வார்டு கவுன்சிலர்களின் முக்கிய கடமையாக உள்ளது. ஆகவே இந்த வார்டுக்கான தேர்தலை விரைவில் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.