/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காத்திருப்போர் கூடம் அமைக்கப்படுமா
/
காத்திருப்போர் கூடம் அமைக்கப்படுமா
ADDED : மார் 13, 2025 04:45 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவில் காத்திருப்போர் கூடம் இல்லாததால் நோயாளிகளின் உதவியாளர்கள் தவிக்கின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்கு 5 தளங்கள்கொண்ட கட்டடம் உள்ளது. இங்கு மாவட்டம்முழுவதும் இருந்து பிரசவத்திற்கு சிக்கலான நிலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
பிறந்த குழந்தைகள், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவும் உள்ளது. இங்கு நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் ஒருவர் மட்டுமே கட்டடத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.
நோயாளியுடன் வந்தவர்கள் வெளியில் 5 மாடி கட்டடத்தின் நுழைவு வாயில் பகுதியில் தரையில் அமர்ந்து காத்திருக்கும் நிலை உள்ளது.
மதிய நேரங்களில் வெயிலின் வெப்பத்தால் யாரும் இந்தப்பகுதியில் அமர முடிவதில்லை. மழைக்காலங்களில் கட்டட நுழைவு வாயில் பகுதி முழுவதும் ஈரமாகிவிடுவதால் தரையில் அமர முடியாத நிலை ஏற்படுகிறது. சிறு குழந்தைகளுடன் வரும் பெண்கள்மிகவும் சிரமப்படுகின்றனர்.
பெரும்பாலும் பிரசவத்திற்கு வரும் பெண்களின் கணவன்மார்கள் காத்திருக்கும் கூடம் இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம் அருகே காத்திருப்போர் கூடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.