/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் சிசு மரணம் அதிகரிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா
/
ராமநாதபுரத்தில் சிசு மரணம் அதிகரிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா
ராமநாதபுரத்தில் சிசு மரணம் அதிகரிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா
ராமநாதபுரத்தில் சிசு மரணம் அதிகரிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா
ADDED : மே 02, 2024 05:10 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு பின் சிசு மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிசு மரணம் அதிகரித்து வருகிறது. கடலாடிஅருகே ராசிகுளம் விஜயக்குமார்-கனகவல்லியின் ஆண் குழந்தை சாயல்குடி அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
இக்குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஏப்.30ல் உயிரிழந்தது. கனகவல்லியின்உறவினர்கள் போராட்டம் நடத்தி போலீசார் சமரசத்தின் பேரில் சிசுவின் உடலை பெற்றுச் சென்றனர்.
இதே போல் ஏப்.28 ல் முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில்பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட முத்துமாணிக்கத்தின் மனைவி வனிதாவுக்கு ஆப்பரேஷன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தைக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டுஆக்சிஜன் குறைந்ததால் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்தனர். வரும் வழியில்ஆம்புலன்ஸ் ராமநாதபுரம் அருகே பழுதாகிவேகம் குறைந்தது.
அடுத்த வாகனத்தில் மாற்றி குழந்தையை ராமநாதபுரம் மருத்துவக்கல்லுாரிமருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தார். இது போல் தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் சிசு மரணம்தொடர்கிறது. சுகாதாரத்துறைஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துமாணிக்கம் கூறுகையில், அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு வரும் போது சரியான சிகிச்சை வழங்காமல் அஜாக்கிரதையாக இருக்கின்றனர்.அதனால் தான் என் குழந்தை இறந்தது என்றார்.

