sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தெருவிளக்குகள் இல்லாமல் இருளில் வசிக்கும் அவலம்

/

தெருவிளக்குகள் இல்லாமல் இருளில் வசிக்கும் அவலம்

தெருவிளக்குகள் இல்லாமல் இருளில் வசிக்கும் அவலம்

தெருவிளக்குகள் இல்லாமல் இருளில் வசிக்கும் அவலம்


ADDED : செப் 17, 2024 05:33 AM

Google News

ADDED : செப் 17, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார், : முதுகுளத்துார் பேரூராட்சி 2-வது வார்டு காந்தி நகர் வடக்கு உள்ளிட்ட பகுதியில் தெருவிளக்கு வசதியில்லாமல் மக்கள் இருளில் தவிக்கின்றனர்.

முதுகுளத்துார் பேரூராட்சி 2-வது வார்டில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். காந்தி நகர் வடக்கு உள்ளிட்ட ஒருசில பகுதியில்​கடந்த சில மாதங்களாக தெருவிளக்கு வசதியில்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். 2-வது வார்டு மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

மக்கள் கூறியதாவது: 2-வது வார்டில் மின் விளக்கு இல்லாமல் சிரமப்படுகிறோம். பேரூராட்சி சார்பில் தெரு விளக்கு அமைப்பதற்காக மின்வாரிய அலுவலகத்தில் பணம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களை கடந்தும் புதிய மின் இணைப்பு கொடுக்காமல் மின்வாரியத்தினர் அலட்சியம் காட்டுகின்றனர்.

இதனால் இரவு நேரத்தில் தெருக்கள் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. வெளியில் வருவதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் புதிதாக தெருவிளக்கு அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us