நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: -முதுகுளத்துார் அருகே கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தில் மகேஸ்வரி அம்பாள், மகாதேவர், முருகன், துர்க்கை அம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு வருடாபிஷேகம் விழா நடந்தது. கணபதி ஹோமம் துவங்கி அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, யாகசாலை பூஜை நடந்தது.
மூலவரான மகாதேவர், மகேஸ்வரி அம்பாளுக்கு பால், சந்தனம், மஞ்சள், திரவியப் பொடி உட்பட 21 வகை அபிஷேகம், பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கீழக்காஞ்சிரங்குளம் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர்.