/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் மீனவர்கள் 10 பேருக்கு செப்.1 வரை காவல் நீட்டிப்பு
/
பாம்பன் மீனவர்கள் 10 பேருக்கு செப்.1 வரை காவல் நீட்டிப்பு
பாம்பன் மீனவர்கள் 10 பேருக்கு செப்.1 வரை காவல் நீட்டிப்பு
பாம்பன் மீனவர்கள் 10 பேருக்கு செப்.1 வரை காவல் நீட்டிப்பு
ADDED : ஆக 25, 2025 11:47 PM
ராமேஸ்வரம்:
இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்கள் 10 பேருக்கு செப்.,1 வரை சிறைக் காவலை நீட்டித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆக.,5ல் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து சீனி என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து புத்தளம் சிறையில் அடைத்தனர். 3வது முறை விசாரணை நாளான நேற்று மீனவர்களை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களுக்கு செப்.,1 வரை சிறைகாவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
20 நாட்களாக சிறையில் இருந்த மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என மீனவர் குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில் காவல் நீட்டிப்பு செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.