/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கடத்த முயன்ற 1000 கிலோ சுக்கு பறிமுதல்
/
இலங்கைக்கு கடத்த முயன்ற 1000 கிலோ சுக்கு பறிமுதல்
ADDED : ஆக 11, 2025 02:45 AM
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபம் வேதாளை கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு மரைன் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூடையில் பொருட்களை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்றது. உடனடியாக மறைந்திருந்த போலீசார் லாரியை மடக்கிய போது டிரைவர் உள்ளிட்ட இருவர் தப்பி ஓடினர்.
பின் லாரியை சோதனையிட்ட போது 50 மூடைகளில் 1000 கிலோ சுக்கு இருந்தது. இதனை கள்ளத்தனமாக படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டதும் தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ. 4 லட்சம். தப்பி ஓடியவர்களை பிடிக்க முடியாமல் மரைன் போலீசார் கோட்டை விட்டதால் அவர்கள் யார், எங்கிருந்து கடத்தி வந்தனர் என்பது தெரியாமல் போனது.