நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அத்தியூத்து பகவதி அம்மன் கோயில் வைகாசி மாத பூஜையை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
முன்னதாக மூலவர் பகவதி அம்மன் உதிரமுடைய அய்யனார், சுப்பிரமணியர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடந்தது.
ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.