/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
108 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
/
108 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
ADDED : ஜன 22, 2025 02:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:தமிழகத்திலிருந்து கடல் வழியாக கடத்தப்பட்டு யாழ்ப்பாணம் பகுதியில் பதுக்கப்பட்டிருந்த 108 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
தமிழகத்திலிருந்து கடல் வழியாக கடத்திவந்த கேரள கஞ்சா யாழ்ப்பாணத்தில் இருப்பதாக இலங்கைக்கு கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. யாழ்ப்பாணம் குரு நகரில் 44 பண்டல்களில் பதுக்கி வைத்திருந்த 108 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதை கடத்தி வந்த குருநகரை சேர்ந்த இருவர், மன்னார், பூநகரி பகுதிகளை சேர்ந்த இருவர் என நான்கு பேரை கைது செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.23 லட்சம்.