sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு

/

108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு

108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு

108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு


ADDED : ஜன 23, 2025 03:56 AM

Google News

ADDED : ஜன 23, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: ஆம்புலன்ஸ் 108ல் ஆண் குழந்தை பிறந்தது. சமயோசிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவாடானை அருகே வெட்டிவயல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலலிதா 37. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. திருவாடானை ஆம்புலன்ஸ் 108க்கு தொடர்பு கொள்ளபட்டது. ஜெயலலிதாவை ஏற்றிக் கொண்டு டிரைவர் அரவிந்தசாமி ஆம்புலன்சை ஓட்டினார். மருத்துவ உதவியாளர் அன்பு உடன் சென்றார். தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பிரசவத்திற்கான அறிகுறி இருந்ததால் இரவு 11:30 மணிக்கு வாகனம் சாலை ஓரம் நிறுத்தப்பட்டது.

அங்கு மருத்துவர்களின் அறிவுரைப் படி பிரசவம் பார்க்கப்பட்டதில் ஜெயலலிதாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அதனை தொடர்ந்து ஜெயலலிதாவும், குழந்தையும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சமயோசிதமாக செயல்பட்டு ௨ உயிர்களை காப்பாற்றிய மருத்துவ உதவியாளர், டிரைவரை மக்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us