sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்திய 11.300 கிலோ தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

/

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்திய 11.300 கிலோ தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்திய 11.300 கிலோ தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்திய 11.300 கிலோ தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது


ADDED : ஜன 04, 2025 11:07 PM

Google News

ADDED : ஜன 04, 2025 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட 11 கிலோ 300 கிராம் தங்கத்தை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து இலங்கையை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் கடல் வழியாக தங்கம், போதை பொருட்கள், பீடியிலைகள், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தல் அதிகமாக நடக்கிறது. கடத்தல் குறித்து இந்தியா- இலங்கை கப்பற்படையினர் தொடர்ந்து ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இலங்கை கடற்படையினருக்கு தமிழகத்திற்கு தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் புத்தளம் மாவட்டம் கல்பிட்டியிலிருந்து சட்ட விரோதமாக கடல் வழியாக கடத்த இருந்த 11கிலோ 300 கிராம் தங்க கட்டிகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து கல்பிட்டியை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் இலங்கை சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்தியாவில் ரூ.10 கோடி. இலங்கையில் இதன் மதிப்பு ரூ.20 கோடி என தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us