/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 12 குழந்தைகள் காயம்
/
பரமக்குடி அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 12 குழந்தைகள் காயம்
பரமக்குடி அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 12 குழந்தைகள் காயம்
பரமக்குடி அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 12 குழந்தைகள் காயம்
ADDED : பிப் 10, 2025 12:23 PM
பரமக்குடி: பரமக்குடி அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 12 மாணவர்கள் காயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் கிரசன்ட் மெட்ரிக் பள்ளி உள்ளது. இங்கு 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி வேன், குழந்தைகளை ஏற்றிக் கொண்டு, கமுதி - பார்த்திபனூர் நெடுஞ்சாலையில் தேவனேரி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. வேனுக்கு முன்னால் டூவீலர் குறுக்கே வந்தது. வேன் டிரைவர் பிரேக் பிடித்த போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 12 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், 108 ஆம்புலன்ஸ் மூலம் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு குழந்தைகளுக்கு தலையில் ரத்த காயம், கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து பார்த்திபனூர் போலீசார் விசாரிக்கின்றனர்