/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது
ADDED : அக் 09, 2025 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 260 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம்போல் இந்திய-- இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்தனர். நேற்று இரவு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். பீதியடைந்தவர்கள் படகுடன் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனால் 3 படகுகளை இலங்கை கடற்படை வீரர்கள் மடக்கி பிடித்தனர். இப்படகில் இருந்த 16 மீனவர்களை கைது செய்து படகுடன் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.