/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காதல் தகராறில் கத்தியால் வெட்டியதில் 2 பேர் காயம்
/
காதல் தகராறில் கத்தியால் வெட்டியதில் 2 பேர் காயம்
ADDED : நவ 05, 2025 09:07 PM
தொண்டி: தொண்டியில் காதல் தகராறில் மாணவர்களுக்கு ஆதரவாக பேச்சுவார்த்தைக்கு சென்றவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பினர் கத்தி, வாளால் வெட்டியதில் இருவர் காயமடைந்தனர்.
தொண்டியை சேர்ந்த மாணவி திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கிறார். இவரை தொண்டியை சேர்ந்த ஒரு மாணவனும், மானாமதுரையை சேர்ந்த மற்றொரு மாணவனும் காதலித்தனர். இதில் இரு மாணவரிடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து தொண்டியில் இருவரையும் சமாதனம் செய்து வைப்பதற்காக இரு மாணவரின் ஆதரவாளர்களும் நேற்று முன்தினம் தொண்டி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே கூடி பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது இரு மாணவர்களின் ஆதராளர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது சிலர் வாள், கத்தியுடன் தாக்கியதில் தொண்டி காந்திநகரை சேர்ந்த சத்யபிரசாத் 26, நம்புதாளை முகமது ரிஸ்வான் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சத்ய பிரசாத் புகாரில் போலீசார் மானாமதுரையை சேர்ந்த கவிபாண்டி, கவுதம், சோட்டு ஆகியோரை தேடி வருகின்றனர்.

