ADDED : ஜன 14, 2026 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: எஸ்.பி.பட்டினம் அருகே வெள்ளையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் 55. இவரது பசு மாடும், இரண்டு கன்றுகளையும் வழக்கம் போல் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டுள்ளார். மாடு வீட்டிற்கு திரும்பாததால் சுற்றுப்புற பகுதிகளிலும் அருகிலுள்ள கிராமங்களிலும் இரண்டு நாட்கள் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் செய்தார்.
எஸ்.பி.பட்டினம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் மங்களக்குடியை சேர்ந்த சேதுபதி 34, முகமதுயாகூப் 43, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மங்களக்குடியில் மாடுகளை விற்பனை செய்ய முயன்ற போது கைது செய்து மாடுகளை கைப்பற்றினர். இருவர் மீது ஏற்கனவே மாடு திருட்டு வழக்குகள் பல உள்ளன.

