sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

உச்சிப்புளியில் 200 கிலோ கடல் அட்டை பறிமுதல்

/

உச்சிப்புளியில் 200 கிலோ கடல் அட்டை பறிமுதல்

உச்சிப்புளியில் 200 கிலோ கடல் அட்டை பறிமுதல்

உச்சிப்புளியில் 200 கிலோ கடல் அட்டை பறிமுதல்


ADDED : ஏப் 01, 2025 06:59 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உச்சிப்புளி: -ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி தெற்கு கடற்கரையில் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கடல் அட்டையை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

உச்சிப்புளி கடற்கரையில் இருந்து கடல் அட்டை கடத்தப்படுவதாக மண்டபம் முகாம் கடலோர காவல் படை அலுவலகத்திற்கு வந்த தகவலையடுத்து அங்கு ேஹாவர் கிராப்ட் ரோந்து கப்பலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். உச்சிப்புளி தெற்கு கடற்கரையில் ஐந்து கேன்களில் 200 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனை கைப்பற்றிய கடலோர காவல் படையினர் மண்டபம் முகாமிற்கு எடுத்து வந்து பதுக்கியவர்கள் குறித்து விசாரித்தனர். கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.80 லட்சம் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். கடல் அட்டைகள் கடல் பகுதியில் உள்ள கழிவுகளை அகற்றும் பணிகளை செய்கிறது. இதனால் கடல் அட்டை தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களில் ஒன்றாகும்.

இதில் உள்ள காண்டிரைட்டின் சல்பேட் கீழ் வாத நோயை குணப்படுத்தும் மருத்துவ பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் மட்டுமே கடல் அட்டை பிடிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இதனை பிடிக்க அனுமதி உண்டு.






      Dinamalar
      Follow us