/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வக்பு சட்ட திருத்த மசோதாவை நிராகரிக்க 2.25 கோடி பேர் மெயில்
/
வக்பு சட்ட திருத்த மசோதாவை நிராகரிக்க 2.25 கோடி பேர் மெயில்
வக்பு சட்ட திருத்த மசோதாவை நிராகரிக்க 2.25 கோடி பேர் மெயில்
வக்பு சட்ட திருத்த மசோதாவை நிராகரிக்க 2.25 கோடி பேர் மெயில்
ADDED : செப் 24, 2024 06:59 AM
பரமக்குடி: வக்பு சட்ட திருத்தத்தை நிராகரிக்கக் கோரி பார்லிமென்ட் கூட்டு குழுவிற்கு 2.25 கோடி பேர் இ-மெயிலில் எதிர்ப்பு தெரிவித்து அனுப்பியுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளர் ஜெய்னுல் ஆலம் கூறினார். அவர் கூறியதாவது:
வக்பு சட்ட திருத்த மசோதாவை 2024ல் மத்திய அரசு பார்லிமென்டில் கொண்டு வந்தது. கடும் எதிர்ப்பால் பார்லிமென்ட் கூட்டுக் குழு பரிசீலனைக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே மக்களிடம் கருத்துக்களை கேட்ட போது சட்டத்தை நிராகரிக்க வலியுறுத்தி 2 கோடியே 25 லட்சத்து 51 ஆயிரத்து 630 பேர் இ-மெயிலில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 12 லட்சத்து 69 ஆயிரத்து 629 பேர் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர் என்றார்.