sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீனவர்கள் 23 பேர் கைது

/

மீனவர்கள் 23 பேர் கைது

மீனவர்கள் 23 பேர் கைது

மீனவர்கள் 23 பேர் கைது


ADDED : நவ 10, 2024 11:12 PM

Google News

ADDED : நவ 10, 2024 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் ; ராமேஸ்வரத்தில் இருந்து, 393 விசைப்படகுகளில் நவ., 9ல் சென்ற மீனவர்கள் இந்திய, இலங்கை எல்லை அருகே மீன்பிடித்தனர். அங்கு ரோந்து சென்ற இலங்கை கடற்படை வீரர்கள், துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை விரட்டினர்.

அப்போது, கீதன், சகாயராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோரது படகுகளில் இருந்த மீனவர்கள் வலையை இழுக்க தாமதமானதால், அப்படகுகளை இலங்கை வீரர்கள் மடக்கி பிடித்தனர்.

படகுகளில் இருந்த, 27 முதல் 58 வயது வரையிலான, 23 மீனவர்களை கைது செய்து யாழ்ப்பாணம் மீன்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க கோரி நவ., 12ல் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மறியல் நடக்கும் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படை சிறைபிடித்த கீதன் படகு, ராமேஸ்வரம் மீன்துறை அனுமதி இன்றி மீன்பிடிக்க சென்ற பைபர் கிளாஸ் படகாகும். இப்படகிற்கு, மீன்துறை பதிவு எண் இல்லை.

இதனால், மீன்பிடிக்க அனுமதி டோக்கனும் வழங்கப்படவில்லை.






      Dinamalar
      Follow us