/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 35 லட்சம் கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம் அருகே 3 பேர் கைது
/
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 35 லட்சம் கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம் அருகே 3 பேர் கைது
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 35 லட்சம் கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம் அருகே 3 பேர் கைது
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 35 லட்சம் கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம் அருகே 3 பேர் கைது
ADDED : மே 11, 2025 01:53 AM
ராமேஸ்வரம்,:ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 35 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை தமிழக குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
மண்டபம் வேதாளை அருகே இலங்கைக்கு கஞ்சா கடத்துவதாக கிடைத்த தகவல்படி குற்றபுலனாய்வு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனர். வேதாளை வளையர்வாடி கடற்கரையில் பதுங்கி இருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்களிடம் 175 கிலோ கஞ்சா பார்சல் இருந்தது.
அவர்கள் வலையர்வாடியை சேர்ந்த கண்ணன் 23, காமேஷ் 22, சக்தி 24, என தெரிய வந்தது. இந்த கஞ்சாவை கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதன் மதிப்பு ரூ. 35 லட்சம். மூவரும் கைது செய்யப்பட்டனர்.
பறிமுதல் செய்த கஞ்சா, கைதான 3 பேரையும் ராமநாதபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இக்கடத்தலில் சில முக்கிய புள்ளிககளுக்கும் தொடர்பு உள்ளதால் மேல் விசாரணை நடக்கிறது.