sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பார்த்திபனுார் மதகில் இருந்து 3272 கன அடி நீர் வெளியேற்றம்; ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

/

பார்த்திபனுார் மதகில் இருந்து 3272 கன அடி நீர் வெளியேற்றம்; ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

பார்த்திபனுார் மதகில் இருந்து 3272 கன அடி நீர் வெளியேற்றம்; ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

பார்த்திபனுார் மதகில் இருந்து 3272 கன அடி நீர் வெளியேற்றம்; ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி


ADDED : நவ 13, 2024 10:02 PM

Google News

ADDED : நவ 13, 2024 10:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி; ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனுார் மதகு அணையிலிருந்து வைகை ஆறு வலது, இடது பிரதான கால்வாய்களில் 3272 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட வைகை பூர்வீக பாசன நிலங்களுக்காக வைகை அணையில் இருந்து நவ.10ல் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பார்த்திபனுார் மதகு அணையை அடைந்த தண்ணீரை ராமநாதபுரம் பெரிய கண்மாய் நோக்கி நேற்று காலை 7:00 மணிக்கு திறந்து விட்டனர்.

இதையடுத்து பரமக்குடி வைகை ஆற்றில் 2612 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் வலது பிரதான கால்வாயில் 220 கன அடியும், இடது பிரதான கால்வாயில் 440 கன அடி நீரும் செல்கிறது. இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கிய வைகை பூர்வீக பாசன பகுதி 1, 2, 3 ல் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது.

தொடர்ந்து நவ. 18 வரை 9 நாட்களுக்கு 1ல் உள்ள விவசாய நிலங்களுக்கும், நவ.20 முதல் 29 வரை மற்றும் டிச. 1 முதல் 8 வரை என படிப்படியாக நீரின் அளவு குறைக்கப்பட்டு வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பரமக்குடியை ஒட்டியுள்ள அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீரை முறையாக பகிர்ந்து கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் மழை இல்லாத சூழலில் கடந்த ஒரு மாதமாக மதுரை பகுதியில் பெய்த மழை நீர் வைகையில் செல்லும் நிலையில் ராமநாதபுரம் பங்கீட்டு நீர் வெளியேற்றப்பட்டது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us