sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரத்தில் 379 படகுகளுக்கு மீன்பிடிக்க அனுமதி

/

ராமேஸ்வரத்தில் 379 படகுகளுக்கு மீன்பிடிக்க அனுமதி

ராமேஸ்வரத்தில் 379 படகுகளுக்கு மீன்பிடிக்க அனுமதி

ராமேஸ்வரத்தில் 379 படகுகளுக்கு மீன்பிடிக்க அனுமதி


ADDED : டிச 15, 2024 09:54 AM

Google News

ADDED : டிச 15, 2024 09:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : சூறாவளி வேகம் தணிந்ததால் 7 நாட்களுக்கு பின் ராமேஸ்வரத்தில் 379 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளத்துறையினர் அனுமதித்தனர்.

டிச.,7ல் இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஸ்டிரைக், டிச.,9ல் மீன்வளத்துறை அதிகாரியை கண்டித்து மீனவர்கள் ஸ்டிரைக், டிச.,11ல் சூறாவளியால் மீன்பிடிக்க தடையால் தொடர்ந்து 7 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் வருவாய் இன்றி தவித்தனர். இந்நிலையில் சூறாவளியின் வேகம் தணிந்ததால் நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 379 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் அனுமதி டோக்கன் வழங்கினர்.

இதையடுத்து ஏழு நாட்களுக்குப் பின் மீன்பிடிக்க சென்றதால் அதிக மீன்கள் சிக்கும் என மீனவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இருப்பினும் இலங்கை கடற்படை வீரர்கள் கெடுபிடி, தாக்குதலால் அச்சத்துடன் சென்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us