sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆந்திர மீனவர்கள் 4 பேர் இலங்கையில் விடுவிப்பு

/

ஆந்திர மீனவர்கள் 4 பேர் இலங்கையில் விடுவிப்பு

ஆந்திர மீனவர்கள் 4 பேர் இலங்கையில் விடுவிப்பு

ஆந்திர மீனவர்கள் 4 பேர் இலங்கையில் விடுவிப்பு


ADDED : செப் 26, 2025 10:58 PM

Google News

ADDED : செப் 26, 2025 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:இலங்கை நீதிமன்றம் விடுவித்த ஆந்திர மீனவர்கள் 4 பேரை படகுடன் கடற்படையினர் அனுப்பி வைத்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லுாரை சேர்ந்த மீனவர்கள் பந்தாடி பிரம்மானந்தம் 53, கரிநாகராஜு 40, சிந்தா நாகேஸ்வரன் 49, சீனுகொப்பாடி 50, ஆகியோர் ஆக.,2ல் கன்னியாகுமரியில் புதிய படகை வாங்கிக் கொண்டு புதுச்சேரி வந்தனர். பின் ஆக.,4ல் வங்கக்கடலில் மீன் பிடித்த போது திசைகாட்டும் கருவி பழுதாகியதால் இலங்கை எல்லைக்குள் படகு சென்றது.

அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அம்மீனவர்களை எல்லை தாண்டியதாக கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இவர்களை செப்.,12ல் ஊர்காவல்துறை நீதிமன்றம் படகுடன் விடுதலை செய்தது. இதனையடுத்து நேற்று காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து ஆந்திர மீனவர்களை அவர்களது படகுடன் இலங்கை வீரர்கள் அழைத்துச் சென்று இந்திய எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். பின் மீனவர்களை ஆந்திரா செல்ல இந்திய வீரர்கள் வழிகாட்டி அனுப்பினர்.






      Dinamalar
      Follow us