/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை டூ தனுஷ்கோடி 4 வீரர்கள் நீந்தி கடந்தனர்
/
இலங்கை டூ தனுஷ்கோடி 4 வீரர்கள் நீந்தி கடந்தனர்
ADDED : ஏப் 17, 2025 02:08 AM

ராமேஸ்வரம்:இலங்கையிலிருந்து தனுஷ்கோடி வரை கடலில் நீச்சல் வீரர்கள் 4 பேர் நீந்தி வந்தனர்.
மஹாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விருஷாலி 28, தானிஷ் 26, நளின் 30, அவினாஷ் 27, ஆகியோர் மும்பை நீச்சல் அகாடமியில் பயிற்சி பெற்று பல நீச்சல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனர். இவர்கள் அதிக நீரோட்டம் நிறைந்த பாக்ஜலசந்தி கடலில் நீந்தி கடக்க முடிவு செய்தனர்.
இதற்காக நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து இரு விசைப்படகில் 4 நீச்சல் வீரர்கள் உள்ளிட்ட 19 பேர் இலங்கை தலைமன்னார் சென்றனர். நேற்று அதிகாலை 4:10 மணிக்கு தலைமன்னார் கடலில் குதித்து நீந்தத் துவங்கினர்.
இதில் அவினாஷ் தொடர்ச்சியாகவும், மற்ற மூவரும் ரீலே முறையிலும் நீந்தி நேற்று மதியம் 1:15 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தனர்.
பாக் ஜலசந்தி கடலில் 9:00 மணி நேரத்தில் நீந்திய இவர்களை இந்திய, இலங்கை நீச்சல் வீரர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ரோஜர், உறவினர்கள் வரவேற்றனர்.