sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் 45ம் நாள் மண்டல பூஜை; ஏராளமானோர் பங்கேற்பு

/

உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் 45ம் நாள் மண்டல பூஜை; ஏராளமானோர் பங்கேற்பு

உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் 45ம் நாள் மண்டல பூஜை; ஏராளமானோர் பங்கேற்பு

உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் 45ம் நாள் மண்டல பூஜை; ஏராளமானோர் பங்கேற்பு


ADDED : மே 18, 2025 10:12 PM

Google News

ADDED : மே 18, 2025 10:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஏப்.,4ல் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து ஏப்., 29, 30 ஆகிய இரு நாட்களில் அரைமண்டலமாக கருதப்பட்டு சிறப்பு மண்டல பூஜை நடந்தது.

அதனைத் தொடர்ந்து 45 நாட்கள் நிறைவை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு மங்களநாதர் சுவாமி கோயில் வடக்கு பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உற்ஸவ மூர்த்திகளான மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு யாக வேள்வி வளர்க்கப்பட்டது.

குடங்களில் புனித நீர் பூஜிக்கப்பட்டு மூலவர்கள் மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன், சகஸ்ரலிங்கம், மரகத நடராஜர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார தீபாரதனைகள் நிறைவேற்றப்பட்டது. பூஜைகளை கோயில் ஸ்தானிக குருக்கள் செய்திருந்தனர்.

ராமநாதபுரம் சேதுபதி ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார் மற்றும் திவான் பழனிவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏராளமான சிவனடியார்களும், பொதுமக்களும் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us