/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குண்டர் சட்டத்தில் 50 பேர் கைது
/
குண்டர் சட்டத்தில் 50 பேர் கைது
ADDED : டிச 26, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 50 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தேவிபட்டினம் பகுதியை சேர்ந்த சரத்குமார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.
இவருடன் சேர்த்து நடப்பு ஆண்டில் 50 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

