ADDED : ஏப் 28, 2025 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி : ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஏ.புனவாசல் ஊராட்சி சிறுகுடி கிராமத்தில் நேற்று மதியம் மழைக்கு ஒதுங்கிய 8 வெள்ளாடுகள் மின்னல் தாக்கியதில் பலியாயின.
சிறுகுடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் செந்தில்வேல், பாண்டி, நாகவள்ளி, சரஸ்வதி ஆகியோரின் 8 வெள்ளாடுகள் நேற்று வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. மதியம் 1:30 மணிக்கு இடி மின்னலுடன் மழை பெய்தது.
ஆடுகள் வேப்ப மரத்தின் அருகே ஒதுங்கியது. அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே 8 ஆடுகள் பலியாகின. விவசாயிகள் காயமடையவில்லை. இறந்த ஆடுகளுக்குரிய உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.