ADDED : டிச 04, 2024 04:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனை முற்றுகையிட முயன்ற தாய் தமிழர் கட்சியினர் 91 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசு கொண்டு வர உள்ள 'ஒரே நாடு ஒரே தேர்தல்,' முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாய் தமிழர் கட்சி தலைவர் பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது ரயில்வே ஸ்டேஷனை முற்றுகையிட முயன்ற 91 பேரை பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.