/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின்கம்பி பொறிபட்டு தீப்பற்றி எரிந்த வைக்கோல்
/
மின்கம்பி பொறிபட்டு தீப்பற்றி எரிந்த வைக்கோல்
ADDED : ஜூலை 29, 2025 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் மறவர் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டியன் கமுதி ரோடு அருகே உள்ள விவசாய நிலத்தில் கடந்த ஆண்டு சேகரித்து வைக்கப்பட்டு உள்ள வைக்கோலை அடுக்கி வைத்திருந்தார்.
இவ்வழியே செல்லும் மின்கம்பியில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பொறி விழுந்து வைக்கோல் எரிந்தது. முதுகுளத்துார் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் மாடசாமி தலைமையிலான வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர்.