/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடல் அலை சுழலில் சிக்கியவர் மாயம்
/
கடல் அலை சுழலில் சிக்கியவர் மாயம்
ADDED : நவ 25, 2025 05:00 AM

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை கடலில் படகுக்கு நங்கூரம் இடுவதற்காக சென்றவர் கடல் அலை இழுத்துச் சென்றதில் மாயமானார்.
நம்புதாளையை சேர்ந்தவர் முத்துராக்கு 50. மீனவரான இவருக்கு சொந்தமான நாட்டு பைபர் படகு கடற்கரையிலிருந்து 50 மீட்டர் துாரத்தில் கடலில் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு பலத்த காற்று வீசியதால் படகை பாதுகாக்கும் வகையில் நங்கூரம் இட்டு நிறுத்துவதற்காக அதே கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் 30, ஆகாஷ் 20, தொண்டீஸ்வரன் 18, ஆகிய மூவரும் கடலுக்குள் சென்றனர்.
நங்கூரம் போட்டு விட்டு நீந்தி கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கடல் நீரோட்டத்தில் சிக்கியதால் தொண்டீஸ்வரனை அலை சுழல் இழுத்துச் சென்றது. அதிர்ச்சியடைந்த மற்ற மீனவர்கள், சங்கு எடுப்பவர்கள், தொண்டி மரைன் போலீசார் உள்ளிட்ட பலரும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மீனவர்கள் கூறுகையில், பலத்த மழை பெய்யும் போது கடலுக்கு அடியில் நீரோட்டம் ஏற்படும். அப்போது நீந்தும் போது கடல் அலை இழுத்துச் செல்லும் என்றனர்.

