ADDED : டிச 10, 2025 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பேராவூர் கண்மாய் கரையில் உள்ள கருவேலங்காட்டு பகுதியில் முட்புதர்கள் சூழ்ந்து காட்டுப் பகுதியாக உள்ளது. புதருக்குள் அழுகிய பெண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
கேணிக்கரை போலீசார் 50 வயதுள்ள பெண்ணின் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறந்து 10 நாட்கள் இருக்கும். அவர் யார், கொலை செய்யப்பட்டாரா என கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

