sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மதுரை விசாரணை கைதி இறந்த  வழக்கு விசாரணை   பிப்.23 க்கு தள்ளிவைப்பு  

/

மதுரை விசாரணை கைதி இறந்த  வழக்கு விசாரணை   பிப்.23 க்கு தள்ளிவைப்பு  

மதுரை விசாரணை கைதி இறந்த  வழக்கு விசாரணை   பிப்.23 க்கு தள்ளிவைப்பு  

மதுரை விசாரணை கைதி இறந்த  வழக்கு விசாரணை   பிப்.23 க்கு தள்ளிவைப்பு  


ADDED : பிப் 17, 2024 04:53 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்ததுதொடர்பான வழக்கில் பிப்.23 க்கு விசாரணையை தள்ளி வைத்து மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார்.

மதுரையை சேர்ந்த ராமானுஜன் மகன் வெங்கடேசன் 26. இவரை திருட்டு வழக்கு விசாரணைக்காக 2012- அக்.,2-ல் பரமக்குடி எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட நிலையில் போலீஸ் ஸ்டேஷனில் உயிரிழந்தார்.

போலீசார் தாக்கியதில் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.இந்த வழக்கில் அப்போதைய எஸ்.ஐ., முனியசாமி ஏட்டுகள் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது.

ஓய்வு பெற்ற எஸ்.ஐ., முனியசாமி ஜாமினில் வந்த பின் உடல் நலக்குறைவால் இறந்தார். இந்த வழக்கில் ஏட்டு பரமக்குடி ஞானசேகரன், மஞ்சூர் கிருஷ்ணவேல், ஆப்பநாடு கோதண்டராமன் ஆகியோரை கைது செய்தனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கின் ஆதாரங்களை திரட்டி குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் ரகசிய வாக்குமூலம் பெற்று ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2ல் அறிக்கை தாக்கல் செய்தனர்.

விசாரணைக் கைதி மர்ம மரணம் தொடர்பான வழக்கு நீதித்துறை நடுவர் மன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி குமரகுரு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. 3 பேரும் ஆஜராகினர். நீதிபதி வழக்கு விசாரணையை பிப்.23-க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.--------






      Dinamalar
      Follow us