ADDED : அக் 26, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம்: தேவிபட்டினம் ஊராட்சி தெருக்களில் தெருவிளக்குகள் கடந்த சில மாதங்களாக பராமரிப்பின்றி உள்ளது.
இரவில் தெருவிளக்குகள் எரியாததால் குடியிருப்பு பகுதிகளில் இருள் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ., கட்சியின் திருவாடானை சட்டசபை தொகுதி தலைவர் முகமது ஹனீப் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பகுருதீன், முகைதீன், ஜமீல் தனி அலுவலரிடம் புகார் அளித்தனர்.

