/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 25, 2025 04:20 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சிதுறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். துாய்மைக் காவலர்களின் மாத ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். மக்கள் நலப்பணியாளர்களுக்கு வழங்க பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊராட்சி செயலர்களை அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஊரக வளர்ச்சிதுறை பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.