/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
/
கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : டிச 29, 2025 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு 564 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு வாணி வீதி கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி பாண்டியன் 25. இவருக்கு சொந்தமான தோப்பில் உள்ள வீட்டில் இருந்து கேணிக்கரை போலீசார் 564 கிலோ கஞ்சாவை டிச.24 அன்று பறிமுதல் செய்தனர். தொடர்புடைய 10 பேரை சம்பவத்தன்று கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பசுபதி பாண்டியனை நேற்று கைது செய்தனர்.

