sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 கல்லுாரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்

/

 கல்லுாரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்

 கல்லுாரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்

 கல்லுாரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்


ADDED : டிச 15, 2025 05:55 AM

Google News

ADDED : டிச 15, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: -பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற, கல்லுாரி மாணவர்கள் டிச.31க்குள் விண்ணப்பிக்கலாம் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அறிவித்துள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மூலம் பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அரசு, அரசு உதவிப் பெறும் கல்லுாரிகள், தனியார் தொழிற் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கலை, அறிவியல் கல்லுாரிகளில் மூன்றாம் ஆண்டு இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி உதவித்தொகை வழங்கப்படும்.

இளங்கலை (தொழிற் படிப்பு), முதுகலை, பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தகுதியுள்ள மாணவர்கள் https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தில் டிச.,31 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்லுாரிகளில் உள்ள உதவித்தொகை ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி கூடுதல் தகவல்களை பெறலாம்.






      Dinamalar
      Follow us