ADDED : ஏப் 22, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: திருப்புல்லாணி ஒன்றியம் எல்.கருங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தேசிய திறனாய்வு தேர்வில் மாணவர்கள் சஸ்மிதா, கனிஷா, யானுஜா, ஜீவன்ராஜ், வர்ஷனா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இவர்களுக்கு திருப்புல்லாணி வட்டாரக்கல்வி அலுவலர் ஜெயா புத்தகம் பரிசாக வழங்கி பாராட்டினார். பள்ளியின் ஆசிரியர்கள் ரூபிலா, ஜோஸ்லியா, சிவசுந்தரி, சீமோன், ரேவதி ஆகியோர் மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினர். தலைமையாசிரியர் பொறுப்பு ஆறுமுகவள்ளி நன்றி கூறினார்.