ADDED : மார் 27, 2025 07:17 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலை சங்கமம் கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, கலைஞர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்
கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஆர்.டி.ஓ., ராஜமனோகரன், கலைச்சங்கம கிராமிய கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் மருங்கன், முருகன் மற்றும் ஏராளமான கிராமிய கலைஞர்கள் பங்கேற்றனர்.
