ADDED : ஜன 30, 2025 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் மனிதநேய வார நிறைவு விழாவை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. தலைமையாசிரியர் ரமேஷ் தலைமை வகித்தார்.
உதவி தலைமையாசிரியர் லட்சுமணன் வரவேற்றார்.
அப்போது பள்ளியில் துவங்கி கிராமத்தின் முக்கிய வீதிகளில் மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று மீண்டும் பள்ளிக்கு வந்தனர்.
இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.