ADDED : ஏப் 25, 2025 10:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை :  கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
நகராட்சி கமிஷனர் ரெங்கநாயகி தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா முன்னிலை வகித்தார். நகராட்சி பொறியாளர் அருள், கணக்காளர்கள் தமிழ்ச்செல்வன், உதயகுமார் மற்றும் கீழக்கரை நகர் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

