/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பஸ்களில் உள்ள விழிப்புணர்வு வாசகம்
/
அரசு பஸ்களில் உள்ள விழிப்புணர்வு வாசகம்
ADDED : செப் 23, 2025 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி; சாயல்குடி, கடலாடி, பரமக்குடி, முதுகுளத்துார், ராமநாதபுரம் செல்லும் கும்பகோணம் கோட்டத்தில் இயக்கப்படும் பஸ்களில் விழிப்புணர்வு வாசகம் ஒட்டப்பட்டுள்ளது.
'விலங்குகளிடம் கருணை காட்டுங்கள்' என்றும் தமிழிழும், ஆங்கிலத்திலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது. பஸ் கண்டக்டர் கூறியதாவது:
பொதுவாக ஒவ்வொரு உயிர்களிடத்திலும் அன்பை காட்ட வேண்டும்.
கருணை காட்ட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் குறிப்பாக விலங்குகளிடத்தில் பொதுமக்கள் கருணை காட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வு அடிப்படையில் எல்லா அரசு பஸ்களிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது என்றார்.